Friday, October 7, 2011

சிறகொடிந்த பச்சை கிளி

அடுக்கி வைத்த கால சுவடுகளை
பிரித்து எடுத்து தலை தூக்கி
'அக்கோ' என்று கேவியது
சிறகொடிந்த பச்சை கிளி
வழிப்போக்கனின் எதிர்காலத்தை
எஜமானன் பண்ணிசைக்க
முகம் பார்த்து கேட்டு நின்றது
வீசிஎறிந்த தானியத்தை
அலகில் கொத்தி கூண்டில் அடைந்தது
தனித்திருந்து வாழக் கற்ற
சிறகொடிந்த பச்சை கிளி

No comments: