Tuesday, October 19, 2010

உதட்டில் உறவு வைத்து,
நெஞ்சில் வஞ்சம் வைத்து
புன்னகை பூக்கள் பூக்க வார்த்தைகள் மலர்வதுண்டு
பேசிய சொற்கள் எல்லாம்
பின்புலம் காணும் வண்ணம்
மூலத்தை அறியும் முன்பே சம்பாஷனை தீர்ந்து விடும்
தனியனாய் அமர்ந்து கொண்டு
பேசியதையும், கேதடையும்
அசை போட்ட எருமை குணம் -
உனக்கும் எனக்கும் -
உங்களுக்கும், எங்களுக்கும் -
சொற்களின் பரிமாற்றம்
நமக்கும் புரிவதில்லை, சேதி ஒன்றும் சொல்வதில்லை
நம்மை நினைத்து கொண்டே
உண்மையே சொன்னாலும்
தன்மை ஒன்றுமில்லை
தனிமைதான் புரிகிறது
இறுதி வரை இருக்கிறது

No comments: