Saturday, July 31, 2010

இருள் போர்த்திய நிலவொளியில் -
தனிமையில் வாய் திறந்து
வான் நோக்கி இசை எழுப்ப
எதிரொலித்தது - குயிலின் ஓசை
நிலவின் வெப்பத்தில் குளிர்
மூச்சும் - உடல் வெறுத்தது
பெண்மையும், பிரேமையும் மோனத்தின்
முதல் படி கட்டு, எட்டி அதில்
நடை போட்டு, இடை நின்று,
தடை வென்று, நினைவு கொண்டு
முன் செலும் கனவு ஒன்று
கண்டேன் இன்று

No comments: