Sunday, March 28, 2010

நினைவுகளை தூர் வாற வேண்டும்
பணமும், பெண்களும், பொருள்களுமாய்
நினைவுகள் முழுவதும் சேறாய் இருக்கிறது
தூர் வாறினால் எதாவது கிடைக்கலாம்

- நல்ல ஒரு ரசனை, முகம் மறந்து போன ஒரு நண்பன்
- ஒரு கவிதையும் கூட

எவரேனும் கண்ணசைவில்,
எவரேனும் சொல் ஒலியில்,
சகதிக் குழம்பினுள் சூரியக் கீற்றாய் -
தொலைந்து போனவை தரிசனம் தந்திடும்

நிச்சயமாய் தூர் வாற வேண்டும்

2 comments:

ரிஷபன் said...

முகம் மறந்து போன ஒரு நண்பன்
ஆமாம்.. தூர் வாரினால் ஒரு புதையலே கிட்டும்..

மதுரை சரவணன் said...

தூர்வாறுதல் நல்லது. கவிதை அருமை . வாழ்த்துக்கள்