நினைவுகளை தூர் வாற வேண்டும்
பணமும், பெண்களும், பொருள்களுமாய்
நினைவுகள் முழுவதும் சேறாய் இருக்கிறது
தூர் வாறினால் எதாவது கிடைக்கலாம்
- நல்ல ஒரு ரசனை, முகம் மறந்து போன ஒரு நண்பன்
- ஒரு கவிதையும் கூட
எவரேனும் கண்ணசைவில்,
எவரேனும் சொல் ஒலியில்,
சகதிக் குழம்பினுள் சூரியக் கீற்றாய் -
தொலைந்து போனவை தரிசனம் தந்திடும்
நிச்சயமாய் தூர் வாற வேண்டும்
2 comments:
முகம் மறந்து போன ஒரு நண்பன்
ஆமாம்.. தூர் வாரினால் ஒரு புதையலே கிட்டும்..
தூர்வாறுதல் நல்லது. கவிதை அருமை . வாழ்த்துக்கள்
Post a Comment